போரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதியானது அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெகுவாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.இதன் காரணமாக நாளாந்தம் இவ் வீதியால் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பொதுமக்கள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக ஆனைகட்டியவெளி,காக்காச்சிவட்டை,சின்னவத்தை முதலிய பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. அசாதாரண சூழ்நிலை கள் ஏற்படும் பொழுது பொதுமக்களின் முக்கிய நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை உடன் பெற்றுக்கொடுப்பது உரிய அதிகாரிகளின் கடமையல்லவா!
எனவே மிக விரைவில் இவ்வீதியை சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரச திணைக்களங்கள் நாட்டு மக்களுக்கான சேவையினை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் சமூர்த்தி...
(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்) சிறுவர் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகம் தற்போது முன்னெடுத்துள்ள முன்பள்ளி அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்...