அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வாகனத்தை தவறாக பயன்படுத்தினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவருக்கு 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

Related posts