அரசாங்கத்துக்கு முதல் தோல்வி

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளையும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பும் தோல்வியடைந்துள்ளது. அதற்கு, ஆதரவாக 34 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Related posts