ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியும்

மட்டக்களப்பு  மாவட்டத்தில் சாரணிய  வளர்ச்சியை பாடசாலை  மட்டத்திலும்   முன்னெடுப்பதற்காக பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியும் , பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான  சாரணர்  சின்னம் சூட்டும் நிகழ்வும்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர்  வி .பிரதீபன்  தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதான வளாகத்தில்  நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட  பாடசாலைகளின்  ஆசிரியர்களுக்கு  பயிற்சி நெறியில்  சாரணிய தேசிய பயிற்றுவிப்பாளர்  அஜித் , சாரணிய முன்னாள் ஆணையாளர் ரவீந்திரன் , மட்டக்களப்பு பயிற்சிக்கு பொறுப்பாளர் உதவி மாவட்ட ஆணையாளர் உதயகுமார்  ,நிகழ்ச்சி பொறுப்பாளர் உதவி மாவட்ட ஆணையாளர்  ஐ .கிறிஸ்டி , நகர பொறுப்பாளர்  எஸ் .சசிகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,  மாவட்ட சாரணர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Related posts