ஆயுத முனையில் நகை கொள்ளை!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் ஆயுத முனையில் நகைளை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முகமூடியணிந்து வந்த இருவர் அராலி பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை புகுந்து கூரிய ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

இதன்போது சுமார் 5 பவுண் தங்காபரணங்கள் ஆயுததாரிகளால் கொள்ளையடிக்கப்படடுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த பெண்ணையும் சந்தேகநபர்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

Related posts