ஆரையம்பதியில் விபத்து! இருவர் கவலைக்கிடம்!

ஆரையம்பதி சிவன் கோயில் அருகே மட்டக்களப்பு கல்முனைப் பிரதான வீதியில் இன்று மாலை 6 மணி வேளையில் ஏற்பட்ட  விபத்தில் இருவருக்கு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டர் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவலிங்கம் நிரோஜன் (வயது 21) தலைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது,
துவிச்சக்கர வண்டியில் பயணித்த 50 வயது மதிக்கத்தக்க சத்தியானந்தன் என்பவருக்கு கால் உடைந்துள்ள நிலையிலேயே ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருவரும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
ஆரையம்பதியச் சேர்ந்த இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். மேலதிக விசாரணையை காத்தான்குடிப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts