இன்று திருவள்ளுவரின் திருவுருச்சிலை ரதபவனி ஆரம்பம்! இன்று அக்கரைப்பற்று திருக்கோவிலை நோக்கி ரதபவனி!

காரைதீவில் நாளை மறுதினம்  28ஆம் திகதி வெள்ளியன்று நிறுவப்படவிருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவச்சிலை இரண்டுநாள் ரதபவனி   இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.
 
காரைதீவு கண்ணகை அம்மன்ஆலய முன்றலில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் விசேட ஆராதரனையுடன் ஆரம்பமாகிய இச்சிலை ரத பவனி கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி வீரமுனை கோரக்கர் கோயில் வரை சென்று திரும்பியுள்ளது.
 
வழிநெடுகிலும்  மாணவர்கள்  பொதுமககள் சிலைக்கு மலர்மாலைஅணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தினர்.
 (26) புதன்கிழமை காரைதீவின் பாடசாலைகளுக்குச்சென்று  புறப்படும்ரதபவனி அட்டப்பள்ளம் ஆலையடிவேம்பு தம்பிலுவில் திருக்கோவில் வரை சென்று மீண்டும் காரைதீவை வந்தடையவுள்ளது.
இதற்கான  ஏற்பாடுகளை  சிலைநிறுவும் குழுச்செயலாளரும் ரதபவனிப் பொறுப்பாளருமான கு.ஜெயராஜி தலைமையிலான குழுவினர்  மேற்கொண்டிருந்தனர்.
 வெள்ளியன்று (28) காரைதீவு பிரதேசசபைமுன்றலில் இச்சிலை நிறுவப்பட்டு தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
சிலையை  இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ திறந்துவைக்கிவிருக்கிறார்.
 
யாழ்.மண்ணிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (24) காலை  காரைதீவை வந்தடைந்தது
இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக பல கலை நிகழ்வுகளும் 21 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்றது இறுதித்தினமாகிய நேற்றுமுன்தினம்(23)  ஐந்து முப்பது மணி அளவில் உத்தியோகபூர்வமாக தமிழ்நாட்டு தமிழ் தாய் அறக்கட்டளை அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட தமிழ் நாடு மலேசியா அவுஸ்திரேலியா லண்டன் பிரான்ஸ் பல நாடுகளிலும் இருந்து வருகை தந்தவர்களின் முன்னிலையில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் வாசலில் வைத்து காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வடமாகாண ஆளுனரின் செயலாளர்   கே.சத்தியசீலன் அவர்களினால் உடையாா் கோயில் குணா மற்றும் இந்தியப் பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts