இரசாயனம் கலந்ததாக தெரிவிக்கப்படும் ஒருதொகை தேயிலைத் தூளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

புளத்சிங்கள -, மஹகம பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில்இரசாயனம் கலந்ததாக தெரிவிக்கப்படும் ஒருதொகை தேயிலைத் தூளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

12ஆம் திகதி விசேட சுற்றிவளைப்புஒன்றை முன்னெடுத்த போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையிலிருந்து, 178 கிலோ 400 கிராம் தேயிலைத் தூள் மீட்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை மேற்கொள்வதற்காக அவற்றின் மாதிரி, தேயிலை சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts