இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிராக முறைபாடு!

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு பதிவுசெய்துள்ளது.

தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இக்கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைபாடு செய்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்த நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts