இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் கல்முனை மாநகரசபைக்கு விஜயம்

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்  18  கல்முனை மாநகரசபைக்கு விஜயம் செய்து முதல்வர் ஏ.எம்.றக்கீபைச்சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தின்மக்கழிவகற்றல்,  தீயணைப்பு மேம்படுத்தல், போன்ற விடயங்களை அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவமுன் வரவேண்டும் என  கல்முனை மாநகரமுதல்வர் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

                                                    அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் திரு.ப்ரைஸ்  ஹட்சன் இன்று கல்முனை மாநகரசபைக்கு விஜயம் செய்து  முதல்வர் றக்கீப்பைச் சந்தித்து கலந்துரையாடலின் போது அம்பாறை மாவட்டத்தின்  சமகால அரசியல்  சமூக கலாச்சார பொருளாதார விடயங்கள்,  யுத்தத்தின் பின்னர் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பிலும் இனங்களிடையே காணப்படுகின்ற காணிப்பிணக்குகள் குடியிருப்பு பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்

Related posts