இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு

களுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியினை தலைவராகக் கொண்ட இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(2)முற்பகல் 9.00 மணியளவில் நடைபெற்றது.

அங்குரார்பண நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்வராசா இபிரதேச சபை உறுப்பினர்கள்இ கல்விமான்கள் இபிரதேச இணைப்பாளர்கள் இபொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சியின் கொள்கைப் பிரகடனம் மற்றும் கட்சியின் விதிமுறைகள் தொடர்பான விடயங்கள் பொதுச் செயலாளர் சாமஸ்ரீ தேச கீர்த்தி க.சிறிஸ்குமாரினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts