இலங்கை மத்திய வங்கியில் பணிப்புரிவதாக கூறி தாயும் மகளும் செய்த மோசமான செயல் !

இலங்கை மத்திய வங்கியில் பணிப்புரிவதாக கூறி விகாரைகளுக்கு சென்று பண மோசடி செய்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரைகளின் அபிவிருத்திக்காக பணத்தினை பெற்று கொடுக்க வேண்டுமாயின் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறி அவர்கள் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி தாயும், மகளும் வெலிமடை பகுதிகளில் உள்ள விகாரை ஒன்றில் இவ்வாறு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று கொள்ள முற்பட்ட வேளை இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் குறித்த தாய், வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts