இலங்கை வந்த சுவிஸ் நாட்டு யுவதி துஸ்பிரயோகம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர் கித்துல்கல பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்றுள்ள போதிலும், தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட யுவதி கித்துல்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா நிமித்தம் குறித்த பகுதிக்கு சென்றிருந்த சுவிஸ் நாட்டு யுவதி, அந்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், 23 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts