இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் இந்த இலவச வீசா சலுகை அறிமுகம் செய்யப்பட்டது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

இலவச வீசா சலுகையின் மூலம், ஒரு மாத சுற்றுலா காலத்தின் பின்னர் சுற்றுலா பயணிகள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும்.

அவர்கள் மேலும் ஒருமாதத்தினை கடந்து நாட்டில் தங்கியிருக்க வேண்டுமெனின், பணம் செலுத்தி வீசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Related posts