இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளி ஆற்றங்கரையோரத்தில் திங்கட்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்த வெளியே சென்றுள்ளார்.மாலையாகியும் வீடு வராததையடுத்து குடும்பத்தரும் அயலவர்களும் அவரை தேடியபோது அவர் இறந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் யோகராசா வயது (34) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் அவயங்களில் காயங்கள் காணப்படுவதினால் இவர் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாமென குடும்பத்தார் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இவரது இறப்புக்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா என்பது தொடர்பி சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts