உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீமதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை உடன் தோண்டி எடுக்க வேண்டும் என முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்து உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Related posts