உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால்க வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார்கள்

(எஸ்.குமணன்)

முன்னைய மஹிந்த  ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கல்முனையில் வீதியில் இறங்கி உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால் இரவோடு இரவாக வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார்கள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிடத்தை இன்று (29) காலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்

முன்னைய மஹிந்த  ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கல்முனையில் வீதியில் இறங்கி உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால் இரவோடு இரவாக வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார்கள் .இவ்வாறான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் தமது ஆட்சிக் காலத்தில்தான் வழங்கியிருந்தோம். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மௌனிகளாக இருந்திருக்க வேண்டும்.

வடக்கில் 39 ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்று ஊடகவியலாளர்களுக்கான பூரண சுதந்திரத்தை வழங்கியுளள்ளோம்.

நாங்கள் எங்களது வாகனத்தில் வீதியில் சென்றாலும் வாகனம் சென்ற வேகத்தில் ஏற்படுகின்ற காற்றில் ஊடகவியலாளர்களின் தலைமுடி கூட அசையாத வண்ணம் நடந்து கொள்கின்றோம்.

ஆனால் இந்த ஊடகவியலாளர்கள் என்று எங்களுக்கு எதிராக கோஷம் செய்கின்றனர் பழி சுமத்துகின்றனர்.

ஊடகங்கள் மீது தீ மூட்டப்பட்டது எந்த ஆட்சிக் காலத்தில் இதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை வெற்றியெல்லாம் சுத்தம் செய்வதற்காக தான் எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவ பிரதமர் இணைந்து இந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக கொண்டு செல்கின்றனர். எங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் உரிமை ஜனநாயகம் என்பதை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய ஆட்சியானது பூரணமான ஆட்சி என்று எங்களால் கூற முடியாது ஆனால் மஹிந்தவின் ஆட்சியை விட சிறந்த ஆட்சி என்பதை உறுதியாக கூற முடியும் என்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தமிழர்கள் தங்களது சமய அனுஷ்டானங்களை செய்வதற்கும் முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டானங்களில் ஈடுபட்டிருக்கும் எந்தவித தடைகளும் எங்களால் விதிக்கப்படவில்லை.

அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டு சமத்துவமான வாழ்வதற்காக எங்களது ஆட்சியாக கொண்டு செல்கின்றோம் நீங்கள்  வழங்கிய 5வருட ஆட்சிக்காலத்தில் எங்களால் இயலுமான வகையில் நாட்டை கட்டியெப்பியுள்ளோம்  இன்னும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது அதனால் தான் மக்களாகிய உங்களிடம் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆட்சியை அமைப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம். என் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் , பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Related posts