ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் 2 மணிவரை

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினையடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்து ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும்.

இந்நிலையில், புத்தளத்திலும் வட மாகாணத்திலும் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு, மதியம் 2 மணிக்கு மீள அமுலாக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை மதியம் 2 மணிக்கு மீள அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டமானது திங்கட்கிழமை காலை 6 மணிவரைக்கும் தொடரும்.

Related posts