எக்கல்ஓயாவில் காணாமல்போனோரை தேடும் பணிகள் ஆரம்பம்

அம்பாறை – தமன, எக்கல்ஓயாவில் மூழ்கி காணாமற்போன நால்வரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து பாடசாலை சுற்றுலா சென்றவர்கள் இன்று காலை எக்கல்ஓயாவில் தோணியொன்றில் பயணித்தபோது, இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோணியில் 9 பேர் பயணித்ததுடன், ஏனைய ஐவரும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர் ஒருவர் மற்றும் பாதுகாவலரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை கடற்பகுதியில் நீராடச் சென்று, நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் நோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts