ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம்

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்திருந்த போட்டோ பிரதி செய்யும் இயந்திரம் ஒன்றினை அஹிம்சா சமூக நிறுவனம் 10.10.2018 அன்று நன்கொடையாக வழங்கி வைத்துள்ளது.

இப்பாடசாலையின் அதிபர் மா.மனோகரனின் எழுத்துமூலமான வேண்டுகோளை பரிசீலனை செய்த அஹிம்சா சமூக நிறுவனம் அங்குள்ள தேவையை உறுதிப்படுத்தியபின் தொண்ணூறாயிரம் ரூபா பெறுமதியான ரொசீபா இன போட்டோ பிரதி செய்யும் இயந்திரத்தினை அப்பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கி வைத்துள்ளது. இவ்வியந்திரத்தினை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அற்றும்; பெற்றோர் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் அஹிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி. விஜயராஜா வழங்கி வைத்தார்.

Related posts