ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று (05) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஹட்டன் – தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், பிரதேச அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உணவு விஷமடைந்ததன் காரணமாக பேரணியில் கலந்து கொண்ட சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 25 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதுடன், 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts