ஒரேநேரத்தில் இருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை!

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குருநாகல் மேல் நீதிமன்றத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (09) இந்த தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு கொகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேவையாற்றிய பெண் ஒருவரை கொலை செய்து பணத்தை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

41 மற்றும் 50 வயதுடைய இருவருக்கே இவ்வாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Related posts