ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை: 10 பேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித இன்று அறிவித்தார்.

அங்குனகொல பெலஸ்ஸ – திக்வெவ பகுதியில் தாய் ஒருவரையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் பிரதிவாதிகள் 1998 ஆம் ஆண்டு படுகொலை செய்தமை நிரூபணமாகியுள்ளது.

வழக்கின் பிரதிவாதி ஒருவர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருகின்ற நிலையில், அவரை கைது செய்வதற்காக இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts