கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் மரணம்மட்டு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலில் காவற் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் (26) அன்று மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது மூன்று பிள்ளைகளின் தந்தையான அபயவீர வர்ணப்பட்ட வெண்புக்கே லால் ரஞ்சித்வில்வா (58) என்ற பொலிஸ உத்தியோகத்தர் நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நுழைவாயிலில் காவற் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீர்  ஏற்பட்ட மயக்கநிலையினால் 1990 அவரச பிரிவு அம்புலன்ஸ் ஊடாக மட்டக்களப்பு போதனாவைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
 
சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட மரணமானவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லையென்றும்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts