கடலில் நீராட சென்ற சிறுவர்கள் சடலமாக மீட்பு

திருகோணமலை மாபிள் கடலில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 13 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் அவை உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts