கடும் மழையினால் வெள்ளம்- கொட்டாஞ்சேனை-ஆமர் – பாபர் சந்தியில் வாகன நெரிசல்

பாறுக் ஷிஹான்
 
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி   கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
திங்கட்கிழமை(16) மதியம்   பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல்  புறக்கோட்டை நவலோக சந்திவரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இதனை கட்டுப்படுத்துவதற்காக  புறக்கோட்டை , டாம் வீதி பொலிஸ் நிலைய  போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் குணசிங்கபுர தனியார் பேரூந்து நிலையமும் பகுதி அளவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே  வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts