கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவரும் அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்

கல்முனைப் பொலிஸ் நிலையத்தில்  பணியாற்றியவரும் அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(19) இரவு 7 மணியளவில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்பவராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்த (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts