கல்முனை தமிழ் கல்விக்கோட்டத்திற்கான கோட்டக்கல்விப் பணிப்பாளராக எஸ்.சரவணமுத்து பதவியேற்பு

(சா.நடனசபேசன்)

கல்முனை கல்விவலயத்திற்குட்பட்ட கல்முனை தமிழ் கல்விக்கோட்டத்திற்கான  கோட்டக்கல்விப் பணிப்பாளராக பாண்டிருப்பைச் சேர்ந்த எஸ்.சரவணமுத்து இன்று 2 ஆம்திகதி திங்கட்கிழமை  கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளராக சிறப்பான முறையில் கடமையாற்றியதுடன்  4 ஆம் கிராமம் வாணி மகாவித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் புவனேந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts