கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் “கலையாழி” கலை இலக்கியத் திருவிழா இடம்பெற்றது.

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் “கலையாழி” கலை இலக்கியத் திருவிழா இடம்பெற்றது.
 

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் நடாத்தும், “கலையாழி” கலை இலக்கியத் திருவிழா  கல்லடி  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் . இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவ ஒன்றிய செயலாளர் க.பத்திநாதன் தலைமையில்  புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி அம்மன்கிளி முருகதாஸ், கிழக்கு பல்கலை நுண்கலைத் துறைத் தலைவர் சந்திரகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related posts