கல்லடி பாலத்தின் அருகில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனுஸ் எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் வந்த வேளை, கல்லடிப் பாலத்தின் வாவியில் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts