களுதாவளைப் பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மரநடுகை நிகழ்வு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின்  கீழ் களுதாவளைப் பிரதேசசபையின் ஏற்பாட்டில்  பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மரநடுகை நிகழ்வு வியாழக்கிழமை  8 ஆம்திகதி  பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி  ஆணையாளர் சி.பிரகாஷ் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேசசெயலாளர் திருமதி வா.வில்வரெத்தினம் பிரதேசபைச் செயலாளர் கே.லெட்சுமிகாந்தன் உட்பட பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


Related posts