காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட காணிச்சீர்திருத்த அதிகாரசபை பணிப்பாளர் திரு.நே.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதிகளாக திரு.நிஹால் விஜேதுங்க, செயற்திட்ட பணிப்பாளர் தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் திரு. துசார வன்னிநாயக்க, பணிப்பாளர் நில அளவை தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு , மற்றும் களுதாவளை கிராம சேவையாளர் கிராம தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முதற்கட்டமாக உறுதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மூன்று மாதகாலத்திற்ள் சுமார் 1000 உறுதி வழங்கும் நிகழ்வு இதே மண்டபத்தில் மிக விரைவில் தவிசாளர் தலைமையில் நடைபெறும் எனவும் மாவட்ட பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. இவ் உறுதி வழங்களானது மாவட்ட பணிப்பாளரின் நீண்ட பிரயத்தனத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts
-
கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.!
மாலை மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அழைப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (29) வெள்ளிக்கிழமை ஐந்தாவது... -
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு... -
சுவிஸ் உதயத்தின் மூலம் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ் உதயம் கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா வலயத்திலுள்ள சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் கலைப்பிரிவில் வறிய நிலையில் கல்வி...