காரைதீவு ஆசிரியை சரண்யாவுக்கு புதுக்கவிதைக்கான விருது! நாளை கிழக்கு தமிழ் இலக்கியவிழாவில் விருது பெறுகிறார்!

காரைதீவு  நிருபர் சகா
 
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம்  கிழக்குமாகாண அரச உத்தியோகத்தர்களுக்கிடையே நாடாத்திய இவ்வருடத்துக்கானபுதுக்கவிதைப்போட்டியில் காரைதீவைச்சேர்ந்த ஆசிரியை திருமதி சரண்யா மதிராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.
 
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதபாட
ஆசிரியையாக கடமையாற்றும் திருமதி சரண்யா முதல்தடவையாக இத்தகைய விருதைப்பெறுகிறார்.
 
கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா நாளை (22) ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பில் நடைபெறுகின்றவேளை இவருக்கு முதற்பரிசும் விருதும்
வழங்கப்படவிருப்பதாக கலாசாரப்பணிப்பளார் சரவணமுத்து நவநீதன் கடிதம்மூலம் அறிவித்திருக்கிறார்.
 
 இவருக்கான விருது நாளை 22 ம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம்  மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது.

Related posts