காற்றின் வேகம் அதிகரிக்கும்

நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த காலநிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களில் (இன்று முதல் ஜூலை 17 வரை) சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என்றும திணைக்களம் அறிவித்துள்ளது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது..