காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா

71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா கோலாகலமாக இடம்பெற்றது.

இந்த விழாவின் பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சாலி தம்பதியர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும், ஜனாதிபதியும் மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றதன் பின்னர், 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

Related posts