கிரானில் அம்கோர் நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை 3ஆண்டுகள் நடைமுறை

அம்கோர் நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டு மற்றும் பெண்களின் வினைத்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான கூட்டம் .

சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான அம்கோர் நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டு மற்றும் பெண்களின் வினைத்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை(5)மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் மா.உதயக்குமார்,உதவி அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி,அம்கோர் நிறுவனத்தின் இயக்குனர் பரமசிவம் முரளிதரன், அவ்வமைப்பின் ஊழியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு காத்திரமான பங்கினை வளங்குதல்,நுண்கடன், புத்தாக்க  விழிப்புணர்வுகள்,சுயதொழில் ஊக்கப்படுத்தல்கள், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளல் சம்பந்தமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை  சமாளிப்பதற்கான சமூக அறிவூட்டல்கள் பற்றியும் “சமூக பொருளாதார அபிவிருத்திற்கான செயற்திட்டம் 2019 ” என்ற திட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கோரளைப்பற்று (வாழைச்சேனை) மற்றும் கோரளைப்பற்று தெற்கு (கிரான்)  ஆகிய இடங்களிளே இத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் கால அளவானது மூன்று வருடங்களாகும்
சிறிய தொழில் பயிற்சிநெறிகள்,வாழ்க்கைத்திரனை மேம்படுத்தும் செயலமர்வுகள், போன்றன தெரிவு செய்யப்பட்ட குடும்ப பெண்களிடையே செயற்படுத்தப்படவுள்ளன.
கிட்டத்தட்ட 930 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இதனால் நன்மை அடையவுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களிலே நிரந்தரமாக வாழும்  குடும்பங்களிலே உள்ள பெண்கள் , பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பெண்களை தலைமைகளாக கொண்ட குடும்பங்கள் மற்றும் அதிக அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மையடையவுள்ளது.

Related posts