கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், காய்ச்சல் ஆய்வு நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் மூவாயிரம் பேருக்கு மலேரியா பற்றிய ஆய்வுகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இதைவிட பூச்சியல் ஆய்வு நடவடிக்கையின் கீழ் மலேரியா பரவக்கூடிய வகையில் காணப்படுகின்ற அக்கராயன் இரணைமடுக்குளம் ஆகிய பகுதிகளில் நுளம்புகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதைவிட வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வோர், இந்தியாவில் இருந்து மீளந்திரும்புவோர் ஆகியோருக்கும் மலேரியா பற்றிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts