கிழக்கின் காட்டுப் பகுதிக்குள் மிருக வேட்டைக்காக சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் !!

திருகோணமலை குச்சவெளி காவல்துறை பிரிவிற்குற்பட்ட சமலங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை மிருக வேட்டைக்காக சென்ற போது, அவரால் கொண்டுசெல்லப்பட்ட நாட்டுத் துப்பாக்கி வெடித்து அவர் மரணித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts