கிழக்கில் கடந்த 12மணிநேரத்தில் 60தொற்று! மொத்தம் 1647தொற்றுக்கள்:

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 60பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.கூடுதலாக கல்முனை தெற்கில் 15பேரும் காரைதீவில் 13பேரும் கிண்ணியாவில் 5பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அதேவேளை கிழக்கில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம்(11)திங்கட்கிழமை  1647 ஆகியது.புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது.
 
கடந்த மார்ச் மாதமிருந்து  பேலியகொட மூலமாக இதுவரை    மட்டக்களப்பு மாவட்டத்தில் 382பேரும் கல்முனை பிராந்தியத்தில் 966பேரும் திருமலை மாவட்டத்தில் 210ரும் அம்பாறை பிராந்தியத்தில் 66பேருமாக 1624பேர்  தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
 
 
10மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை வவுணதீவு  காத்தான்குடி நாவிதன்வெளி  ஆயைடிவேம்பு உகனை இறுதியாக காத்தான்குடியிலும் மொத்தம்  10 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 10 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
இத்தரவுகளை  கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
 
 
கல்முனை பிராந்தியத்தில் 966..
 
கல்முனைப்பிராந்தியத்தில் 966ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை  928பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அதில் அக்கரைப்பற்று 310 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 244 அட்டாளைச்சேனை 88 பொத்துவில் 77  சாய்ந்தமருது 59 ஆலையடிவேம்பு 36  காரைதீவு 34  இறக்காமம் 24 சம்மாந்துறை 27 நிந்தவுர் 18 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 18 நாவிதன்வெளி 17 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
கடந்த பல நாட்களாக காரைதீவுப்பிரதேசத்தில் 14ஆக இருந்த தொற்று நேற்றையதினம் மாளிகைக்காட்டில் இனங்கண்ட 13பேருடன் 34 ஆக உயர்ந்துள்ளது. காரைதீவிலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
கல்முனை மாநகரில் 380
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 380 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது.
 
கல்முனை தெற்கில் 244பேரும் சாய்ந்தமருதில் 59பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 11வது நாளாக அமுலில்உள்ளது.
 
மட்டக்களப்பில் 382…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   382ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 158 பேரும் கோறளைப்பற்றுமத்தியில் 71 பேரும் ஓட்டமாவடியில் 39பேரும் களுவாஞ்சிக்குடியில் 35பேரும் மட்டக்களப்பில் 29பேரும் ஏறாவூரி;;ல் 19 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் 210…
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   210ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 101பேரும் மூதூரில் 47பேரும் கிண்ணியாவில் 26பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
 
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள்66பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 966பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
46283பேருக்கு பிசிஆர் பரிசோதனை
 
இதுவரை கிழக்கில்     46283பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 22067 சோதனைகளும் மட்டக்களப்பில் 13615 சோதனைகளும் அம்பாறையில் 3423 சோதனைகளும் திருகோணமலையில் 7178 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
 
08சிகிச்சை நிலையங்களில் 2869 அனுமதி
 
கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன.  புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமலை    மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.
 
 
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 552கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (11.01.2021) திங்கட்கிழமை  வரை 2869பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 2302பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.15பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
 
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 930பேர் அனுமதிக்கப்பட்டு 773பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 150பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். 7பேர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 30 கட்டில் தேவையாகவுள்ளன.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 73 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 105 பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 77 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 53 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 45பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 49பேரும்  சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts