கிழக்குமாகாண ஜே.கே.எம்.ஓ சங்கத்தின் ஏற்பாட்டில் “ஜே.கே. எம்.ஓ. 2018” சர்வதேச கராட்டி கருத்தரங்கும்,வரவேற்பு நிகழ்வும்

கிழக்குமாகாண ஜே.கே.எம்.ஓ சங்கத்தின் ஏற்பாட்டில் “ஜே.கே. எம்.ஓ. 2018” சர்வதேச கராட்டி கருத்தரங்கும்,வரவேற்பு நிகழ்வும்,சங்கத்தின் தலைவரும்,பொறியியலாளருமான எஸ்.முருகேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி  பெற்றவர்களுக்கு நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட ஜப்பான் நாட்டு ஜே.கே.எம்.ஓ.கராட்டி  அமைப்பின் இயக்குனர்  ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக  ஜப்பான் நாட்டு ஜே.கே.எம்.ஓ.கராட்டி  அமைப்பின் இயக்குனர் கஞ்சோ சசகி டோஷியாட்சு,சிறப்பு விருந்தினர்களான மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் , முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,இலங்கை ஜே.கே.எம்.ஓ கராட்டி சங்கத்தின் தலைவர் தனஞ்சய அபேவர்த்தன, கிழக்குமாகான ஜே.கே.எம்.ஒ கராட்டி சங்கத்தின் ஆலோசகர் ஜே.ஆர்.பீ. விமல்ராஜ்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் , மாநகர சபை உறுப்பினர் மதன் உட்பட மட்டக்களப்பு ,அம்பாறை ஜே.கே.எம்.ஓ.கராட்டி சங்கத்தின் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது கலந்துகொண்டவர்களுக்கு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts