கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு திங்கட் கிழமை விடுமுறை

தைப் பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாகைளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரமே இந்த விடுமுறை செல்லுபடியாகும். தேசிய பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தினத்திற்கான மாற்றுப் பாடசாலை நாளாக 19 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மூடப்படும் என்று இன்று மாலை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts