கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் பணியாற்றி வந்த நிலையில்கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தன்னை அப்பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக எம்.கே.எம்.மன்சூரினால் ஆட்சேபனை மனு தாக்கல் கடந்த மார்ச் 05ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

அவ்வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை வழங்கியிருந்ததுமனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா என்பவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் பற்றி நீதிபதி இரு தரப்பினருக்கும் இன்று விளங்கப்படுத்தினார்

Related posts