குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகளுக்கு சேதம்

கேகாலை – அட்டாளை பிந்தனிய தோட்டத்தில் லயன் குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை வீசிய பலத்த காற்றினை அடுத்து மத்திய பிரிவு 50 ஏக்கர் தோட்ட லயன் குடியிருப்பு மீது அரச மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 12 வயதான இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில், லயன் குடியிருப்பில் வசித்த12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் பிந்தனி தோட்டத்தின் தமிழ் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இதுவரை தம்மை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பசறை பிரதேசத்தின் எல்டெப் தோட்டத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

Related posts