குடும்ப தகராறு காரணமாக 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை மட்டக்களப்பு தேத்தாத்தீவில் சம்பவம்

களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதி தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஶ்ரீகலா என்ற 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாயாரே இன்று காலை தனது அவரது இல்லத்தில் உள்ள கடையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் வினவியபோது….
மூன்று பிள்ளைகளின் தாயாரான பெயர் குறிப்பிட்ட ஶ்ரீகலா என்பவர் தமது குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சிறு கடை ஒன்றை நடாத்திவந்துள்ளார் அவரது கணவன் வேலை நிமிர்த்தம் கொழும்பு சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பெருங்குற்றப் பிரிவினர் முன்னெடுப்பதான களுவாஞ்சிக்குடி பொலீஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts