குண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு! – ஜனாதிபதி

போதைப்பொருள் தொடர்பாக தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாகக்கூட, நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் இருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மத பிரிவினைவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்புள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக புலிகளுக்கும் பெருந்தொகை பணம் கிடைத்ததென சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒருசிலரின் செயற்பாடுகளுக்காக அனைத்து முஸ்லிம்களையும் தவறாக நினைக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்தோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இவ்விடயத்தை அரசியல் விவகாரமாக அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தாமல், சர்வதேச தீவிரவாதத்தின் தாக்கத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts