கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தினார்.

இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிய ஆதரவு தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களுக்கு கருத்திற் கொள்ளாமல் இந்திய மேற்கு நாடுகளின் நலன்களுக்காகவே ரணிலை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பின் எடுத்திருக்குன்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

அதிகாரப் போட்டியில் தமிழ்த் தரப்புக்கள் பேர்ம் பேச வேண்டிய இடத்தில் பேர்ம் பேசாமல் வெளுமனே ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related posts