கொரோனா  தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகம்தகவல்

மட்டக்களப்பு நகர் அரசடி கிராம சேவையாளர் பிரிவு  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில்  மீண்டும்  கொரோனா  தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகம்  தெரிவிக்கின்றன  .

கடந்த  ஆம் திகதி  கொரோனா தொற்றின் காரணமாக  உயிரிழந்தவரின்  மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட   பி  சி ஆர்  பரிசோதனையில்  மனைவிக்கு  கொரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டு    மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிந்த  நிலையில் இன்று  காலை அவர் உயிரிழந்துள்ளதாக  காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

உயிரிழந்தவரின்  மரணம் தொடர்பான  விசாரணைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளினால்  முன்னெடுத்து வருகின்றனர்

இந்நிலையில்  தேசிய கொரோனா செயலணி கூட்டத்தில்  நேற்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய   மறு அறிவித்தல் வரும் வரை மட்டக்களப்பு நகர் அரசடி கிராம சேவையாளர் பிரிவு  தொடர்ந்து   தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக   தேசிய கொரோனா செயலணி  தலைவர்  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts