கொழும்பில் தீ அனர்த்தம்: பெண் வைத்தியர் உயிரிழப்பு

கொழும்பு பெல்லன்வில பகுதியின் வீடொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

(வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரும், ஐந்து வயது மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

38 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே இவ்வாறு தீ அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். அவரது கணவரும் வைத்தியர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திடீர் தீ அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts