சத்துருக்கொண்டான் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் பா.உ ஸ்ரீநேசன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள்…



சத்துருக்கொண்டான் பிரதேச ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலய புனரமைப்பு வேலைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பணிகளின் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சத்துருக்கொண்டான் வட்டார மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன் அவர்களிடம் ஆலய பரிபாலன சபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக அவர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேற்கொண்ட வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாலயத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக கம்பெரலிய திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Related posts