சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்கள் சேர்த்த வைத்தியர் கைது

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்கள் சேர்த்தமை தொடர்பில் குருணாகல் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான சேகு சியாப்தீன் மொஹம்மட் சாபி என்ற வைத்தியரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வைத்தியருக்கு சொந்தமான சந்தேகத்திற்கிடமான சொத்துக்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபருக்கு எவ்வாறு சொத்துக்கள் கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts